
யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான்
யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு புரையேறியதால் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது.
இச்சம்பவத்தில் சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குழந்தை நேற்றையதினம் சனிக்கிழமை கச்சான் சாப்பிட்டவேளை புரையேறியது. பின்னர் குழந்தை உறங்கிய நிலையில் நேற்று இரவு வாந்தி எடுத்த போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்ததுள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சுவாசக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்