
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
-யாழ் நிருபர்-
நல்லூர் மூத்தநயினார் வீதி பகுதியைச் சேர்ந்த (வயது 24) இளைஞர் ஒருவர் 2 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு.
