யாழில் ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை ஒன்று இன்று சனிக்கிழமை நடாத்தப்பட்டது.
“இலங்கையில் மனித உரிமைகள் : தேசிய மற்றும் சர்வதேச பார்வை என்ற தலைப்பில், இன்ரர் நியூஸ் என்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த பயிற்சிப் பட்டறையானது நடாத்தப்பட்டது.
இதன்போது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள், இன்னொரு நாடு தொடர்பான விடயத்தில் செலுத்துகின்ற கரிசினை அல்லது செல்வாக்கு, ஊடகவியலாளர்கள் மீதான உரிமை மீறல்கள், உண்மைத் தன்மையான தகவல்களுடன் செய்தி அறிக்கையிடல் போன்ற பல விடயங்கள் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
