யாழில் இந்தியாவின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம்

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் இந்திய தேசியக்கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார்.