
யானையின் வருகையால் மக்கள் அச்சம் : சம்மாந்துறையில் சம்பவம்!
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட கைகாட்டி சந்தி எனும் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணியளவில் காட்டு யானை வருகை தந்துள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
உரிய அதிகாரிகள் யானைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
