யாசகம் பெறும் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கண்டி, துட்டுகெமுனு மாவத்தைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அப்பிரதேசத்தில் யாசகம் பெறும் ஒருவர் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய ஆண் ஒருவர் கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாசகம் பெறுபவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதாலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.