மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் முள்ளியவளை பகுதியை சேர்ந்த எம்பெருமாள் குமரவேல் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்