மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் உயிரிழப்பு (படம் இணைப்பு)

 

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து இன்று வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது.

ஈச்சிலம்பற்றில் இருந்து சேறுநுவர நோக்கி சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட ஈச்சிலம்பற்று -பூநகர் பகுதியில் வசித்து வரும் கே.கஜரூபன் (34 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் பூநகர் சிவன்கோயிலில் பூசகராக பணி புரிபவர் எனவும் எனவும் தெரியவருகிறது.

உயிரிழந்த பூசகரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்