
மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து: இளம் பெண் உயிரிழப்பு
கம்பஹா – அத்தனகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவல வீதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கலபிடமட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
அத்தனகல்லவிலிருந்து அலவல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்து வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை அத்தனகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.