
மோட்டார் சைக்கிள்களை திருடி குற்றவாளிகளுக்கு விற்பனை செய்த நபர் கைது
களுத்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த இளைஞன் ஒருவன் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபரிடம் இருந்து 1.750 கிராம் ஐஸ் போதைபொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி காலி, பேருவளை மற்றும் பொத்தல பொலிஸ் பிரிவுகளில் இருந்து திருடப்பட்ட ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்