மோட்டார் சைக்கிளுடன் மோதிய லொறி: ஒருவர் காயம்
-பதுளை நிருபர்-
பசறை நகரில் இன்று வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பதுளையில் இருந்து மதுபான போத்தல்களை ஏற்றிக் கொண்டு புத்தலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும் பசறை பிரபல பாடசாலை ஒன்றில் தனது சகோதரியை இறக்கிவிட்டு பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் பசறை நகரில் வைத்து மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது பசறை பசறை டிவிசன் பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலகஸார் மேற்கொண்டு வருகின்றனர்.