
மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு
நாவுல மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கத்தின் அணைக்கு கீழே, 300 மீற்றர் ஆழத்தில் நீர் பாயும் பாலத்தின் அடியிலிருந்து இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரலகொல்ல இராணுவ முகாமைச் சேர்ந்த 10 இராணுவ சிப்பாய்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் எல்பிட்டிய பிரசேத்தைச் சேர்ந்த (வயது – 39) ஒருவரென தெரிவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
