
மூதூரில் கைக்குண்டு மீட்பு!
-மூதூர் நிருபர்-
திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சின்னக்குளம் கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கைக் குண்டொன்று மீட்கப்பட்டு , நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த காணியின் உரிமையாளர் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தபோது கை கொண்டு ஒன்று இருப்பதை கண்டு சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து மூதூர் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்டு, சம்பூர் பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் குறித்த கைகுண்டினை செயலிழக்க செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

