முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் இளைஞரை மோதித் தள்ளிய வாகனம்

-முல்லைத்தீவு நிருபர்-

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 7:30 மணியளவில் இளைஞரொருவரை வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது

இவ் விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற வாகன சாரதி மற்றும் வாகனம் நகரவாசிகளால் பிடிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளது

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்