முன்னாள் கடற்படைத் தளபதி கைது

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் பொதுஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக நிஷாந்த உலுகேதென்ன இன்று கைது செய்யப்பட்டார்.

கடற்படை புலனாய்வு இயக்குநராக அவர் பணியாற்றிய காலத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையின் 24வது தளபதியாக அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜூலை 15இ 2020 அன்று பதவியேற்றார்.

2022 டிசம்பர் 18 அன்று தனது பதவிக்காலம் முடிந்ததும் அவர் இலங்கை கடற்படையின் தளபதி பதவியை ராஜினாமா செய்தார்.