முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு பிடியாணை உத்தரவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு பிடியாணை பிறப்பித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தனது வழக்கு விசாரணைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.