
முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் : ஒருவர் உயிரிழப்பு!
முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் : ஒருவர் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாதகல் மேற்கு, மாதகல் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உலகேந்திரம் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நெற்று வெள்ளிக்கிழமை மற்றொருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஏற்றியவாறு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது சங்கானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில், முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்தி செல்ல முற்பட்டவேளை, எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட்டனர்.
பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.