மீன் வாங்குவதில் கைகலப்பு: ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு

புத்தளம் மாரவில வடக்கு மூதுகடுவ கடற்கரையில் இன்று ஞாயிற்றுகிழமை இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

மூதுகடுவ கடற்கரையில் கரைவலை மீன் வாங்க சென்ற சிலருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அங்கு கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதன்போதே துப்பாக்கிச் சூடு மற்றும் வாள்வெட்டு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அந்த நபரின் தாயும் வெட்டுக்காயங்களுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் வெட்டுக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதல் நடந்ததாக கூறப்படும் கடற்கரையில் துப்பாக்கி ஒன்றும், இரண்டு வெற்று தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மாரவில தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்