மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை காணவில்லை
-மன்னார் நிருபர்-
தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக கடந்த செவ்வாய்கிழமை மாலை 07.30 மணி அளவில் படகு ஒன்றில் வலிச்சல் மூலம் சென்ற இரு மீனவர்கள் வழமையாக கரை திரும்பும் நேரத்தில் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் மீனவர்கள் குறித்த மீனவர்களை தேடி வருகின்றனர்.
குறித்த மீனவர்களை தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவில் தரித்து நிற்பதாகவும் நேற்று புதன்கிழமை மாலை வரை அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான ஜே.நிக்சன் டிலக்ஸ் கூஞ்ஞ மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரி. சுமித்திரன் என்போரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.