மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 8 உணவுகள்

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 8 உணவுகள்

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 8 உணவுகள்

🟡சில உணவுகள் மீண்டும் சூடுபடுத்தும்போது அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன. மற்றவை நமக்கு விஷமாக மாறுகின்றன. எனவேஇ நாம் என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதை எப்போதுமே மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிலும் இந்த 8 உணவுகளை சூடுபடுத்தவேக் கூடாது அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளவோம்.

🔸உருளைக்கிழங்கு உங்களுக்கு மிகவும் நல்லது.. அவை மிக அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றை அதிக நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு இழக்க வாய்ப்புள்ளது. அவற்றை சூடாக்குவது நச்சுத்தன்மையுடையதாக மாறும்.

🔸கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும். குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

🔸முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த  முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

🔸பொதுவாக மீண்டும் சூடுபடுத்தப்படும் உணவுகளில் சிக்கன் ஒன்றாகும். ஆனால் அதை மீண்டும் சூடுபடுத்துவது மிகவும் ஆரோக்கியமற்றது, ஏனெனில் இதில் அதிக புரதம் உள்ளது மற்றும் மீண்டும் சூடாக்குவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

🔸காளான்கள் எப்போதும் பறிக்கப்பட்ட உடனேயே உண்ணப்படும். சமைத்த பிறகு அதிக நேரம் வைத்திருந்தால், அவற்றில் உள்ள புரதங்கள் மாறி, ஜீரணிக்க கடினமாகிவிடும். அதனால் அதனை சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

🔸அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

🔸எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

🔸பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 8 உணவுகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்