
மீண்டும் ஒலிம்பிக்கில் களமிறங்கும் வினேஷ் போகத்!
2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடைப் பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக எடை இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஹரியானாவின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் அதில் வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில் வினேஷ் போகத் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக “லாஸ் ஏஞ்சல்ஸ் 2028-ஐ நோக்கி அஞ்சா இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் திரும்புகிறேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
