மீண்டும் ஆரம்பமானது இலங்கை இஸ்ரேல் விமானச் சேவைகள்

இலங்கைக்கும், இஸ்ரேலுக்குமான விமானச் சேவைகள் இன்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ஈரான் – இஸ்ரேல் மோதல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் இடம்பெறுகின்றன.

எவ்வாறாயினும், தற்போதைய நிலையில், மீண்டும் மோதல் அதிகரிக்குமாயின் விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்