மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை

மெகொட பொருளாதார மத்திய நிலையத்தில் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகரை மிளகாய்ப் பொடியால் தாக்கி அவரிடம் இருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த வர்த்தகர் இன்று காலை வர்த்தகத்தை மூடிவிட்டு தனது முச்சக்கர வண்டியில் மற்றுமொரு தொழிலாளியை மேகொட தம்ம மாவத்தை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பின்னர் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது மீகொட சிறிரத்தன மாவத்தையில் முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் திடீரென மிளகாய்ப் பொடியை தூவி விட்டு அவர் வைத்திருந்த 45 இலட்சம் ரூபா பணப் பொதியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்