மியன்மாரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று திங்கட்கிழமை காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.44 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் 80 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 18.80 பாகை வடக்கு அட்சரேகையிலும், 94.86 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 3.56 மணியளவில் ரிக்டரில் 3.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.