
மின்னல் தாக்கி தாய் மரணம்
மொனராகலை குடா ஓயா பொலிஸ் பிரிவின் மகாயாய பகுதியில் நேற்று மின்னல் தாக்கி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொனராகலை குடா ஓயா பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
குறித்த தாய் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் மழை பெய்யும் நேரத்தில் நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
இதன் போது மின்னல் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்