மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
பொலன்னறுவை – அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெகுலுவெல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வயல்வெளி வேலை செய்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரலகங்வில கெகுலுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மற்றுமொரு நபருடன் இணைந்து வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த வயோதிபரின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.