மின்சார ஊழியர் வெட்டிக் கொலை

களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை பனாபிட்டியவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைக்கான சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.