மின்சாரம் தாக்கி சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில், குறித்த பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனே உயிரிழந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
குறித்த சிறுவன் தமது தாயாருடன் புல் வெட்டுவதற்காகச் சென்றபோது அந்தப் பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் உடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
