
மிதமான நிலையில் காற்றின் தரம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வியாழக்கிழமை காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காற்றின் தரம் 42 – 68க்கும் இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அனைத்து நகரங்களிலும் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
