மா ஓயாவில் மூழ்கி ஒருவர் பலி
புத்தளம் மாவட்டம் நால்ல, கீலம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மா ஓயாவை கடக்க முயன்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நால்ல, திவுல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மற்றுமொரு நபருடன் மா ஓயாவை கடக்கும்போது நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் வத்துபிடிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்