மாற்றுத் திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு

-கிண்ணியா நிருபர்-

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆலோசனைக்கு அமைவாக மாற்றுத் திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துதல் எனும் திட்டத்துக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நேர்முகத் தேர்வும், தொழில் விழிப்பூட்டல் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை  பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வினை மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் த.பிரணவன், மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர் சாஜிதா பர்வீன், சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜெசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்