மாமியுடன் குளத்தில் நீராடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது மாமியுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கியுள்ளார்.

அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.