மாப்பிள்ளை கனடாவில் : ஒன்லைனில் நடந்த நிச்சயதார்த்தம்!
திருமண நிச்சயதார்த்தம் ஒன்று நிகழ்நிலையில் நடைபெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவில் பணிபுரியும் மணமகனுக்கு இந்தியாவில் உள்ள மணமகளுக்கும் இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், நிச்சயதார்த்தத்தை நடத்தத் திட்டமிட்டனர்.
எனினும் மணமகனுக்கு கனடாவில் விடுமுறை கிடைக்காததால், அவர் நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் மணமகள் வீட்டாரின் ஊரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பிரமாண்ட திரை அமைக்கப்பட்டு, கனடாவிலிருந்து மணமகன் நிகழ்நிலை மூலம் கலந்துகொண்டார்.
மணமகள் மேடையில் அமர்ந்திருக்க, திரையில் தோன்றிய மணமகனுடன் பிராமண சம்பிரதாய முறைப்படி நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.




