மாணவியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய ஆசிரியர் கைது

பாடசாலையில் 12 வயதான மாணவியை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹல்துமுல்ல பொலிஸாரால் 55 வயதுடைய ஆசிரியரை நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி பாடசாலையின் கழிவறையில் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன் இந்த ஆசிரியரால் ஏனைய மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களா என்பதை அறிய ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்