மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும் மாணவர்களும் கைது

40

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் அவர் கற்பித்த பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக இணைக்கப்பட்டு ஆசிரியராக பணியாற்றும் ஒருவரும், சில மாணவர்களும் இணைந்து அங்கு கல்வி கற்கும் இம்முறை சாதராண தரப்பரீட்சை எழுதிய வகுப்பைச் சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வல்லுறவிற்கு வேறு வேறு சந்தர்ப்பங்களில் உட்படுத்தியிருக்கின்றனர்.

முதலில் மாணவர்களுடன் இணைந்து அங்குள்ள மாணவிகளைக் காதலிக்க வைத்து அவர்கள் அனுப்பிய நிர்வாண ஒளிப்படங்கள் மற்றும் பாலியல் உறவில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து குறித்த ஆசிரியர் மாணவிகளை அச்சுறுத்தி வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறார்.

அதனையும் வீடியோவாக எடுத்திருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு மாணவிகள் என்றெல்லாம் வல்லுறவில் ஈடுபட்டிருக்கிறார்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபரான ஆசிரியரது தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிரியர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையானதோடு கைது செய்யப்பட்டுள்ளார்.

5 மாணவர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் ஒருவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரையிலும் மற்றுமொரு சந்தேகநபரை 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனைய 4 மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சில மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச் செயலுடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Sureshkumar
Srinath