
மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கி வைப்பு
-மூதூர் நிருபர்-
திருகோணமலை அறிவு ஒளி மையத்தில் இலவசக் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவு பாடசாலையில் அறிவு ஒளி மையத்தின் நிறுவுனர் உதயகுமார் அஜித்குமார் தலைமையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி. நோயல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.
இதன்போது மாணவர்களது கல்வி விழிப்புணர்வு நாடகம், போதைப் பொருள் விழிப்புணர்வு கூத்து, கலாச்சார நடனம் , பாடல் என பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் கடற் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சங்கங்கள், இளைஞர் சங்கம், அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்