மாணவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறுஇபொற்கொல்லர் வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் ஜெசான் என்னும் மாணவரே இவ்வாறு காணாமல்போயிருந்தார்.

மூன்று பேர் கடலுக்குள் குளிக்கச் சென்ற போது குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்தான், இவ்வாறு அடித்துச்செல்லப்பட்ட மாணவனின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்