மாசடைந்து வரும் ஏத்ததாளைக்குளச்சூழல்: களம் இறங்கிய தவிசாளர் வினோ

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஏத்தாளை குளத்தினை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அழகுபடுத்தும் செயற்றிட்டம் நேற்று வெள்ளிக்கிழமை தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் சிறப்பான பறவைகள் சரணாலயமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஏத்தாளைக்குளத்தில் எழுபதுக்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வாழ்விடமாக கொண்டு காணப்படுகின்றது.

இந்த குளத்தினை பார்வையிடும் பொருட்டு பலர் குறித்த பிரதேசத்திற்கு வருகைதருவதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த பிரதேசத்தில் மக்கள் குப்பைகளை கொட்டுவதனால் சூழல் மாசடைவதை அவதானித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ் அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களை மற்றும் இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்யும் பணியை நேற்று மேற்கொண்டார்.

இதன்போது சூழல் சுற்றாடல் உத்தியோகத்தர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.