மஹிந்த மற்றும் பஸில் நாட்டிலிருந்து வெளியேற தடை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் நாளை வெள்ளிக்கிழமை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் பிரதிநிதித்துவப்படுத்தி உயர் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் இதனை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.