மலையகத்தில் 2 ஆயிரம் பயனாளர் குடும்பங்களுக்கு வீட்டு பத்திரங்கள் வழங்கிவைப்பு

மலையகத்தில் 2 ஆயிரம் பயனாளர் குடும்பங்களுக்கு வீட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று ஞயிற்றுக்கிழமை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமானது.

இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் 10 ஆயிரம் வீடுகள் திட்டத்தின் நான்காவது கட்டமாக 2ஆயிரம் பயனாளர்களுக்கு வீட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற கருப்பொருளின் கீழ் நாட்டில் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், செயற்படுத்தப்படும் இந்த வீட்டுத் திட்டம், மலையக தொழிலாளர்களுக்கு ஒரு வீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டிற்கு சேவையை வழங்கும் மரியாதைக்குரிய குடிமகனாக அவர்கள் மாறுவதற்கான அடித்தளமாகவும் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், அடிப்படை வசதிகளுடன் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகளை வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

இந்த வீடுகளை வழங்குவதற்கான சரியான வழிமுறையின், பயனாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.