மற்றுமொரு துப்பாக்கிச்சூடு
கடுவலை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுவலை அருகே வெலிவிட்ட பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (8) மாலை குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிசார் சென்றிருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த சந்தேகநபர் பொலிஸாரைத் தாக்க முயன்றதன் காரணமாக அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.