
மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!
களனியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டைச் சோதனையிட்டதைத் தொடர்ந்து குறித்த பெண் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் களனி, கோனவல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனவும் அவர் தனியாக வசித்து வந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
களனி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
