மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்!
இந்தியா – உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ள கிராவாலி பகுதியைச் சேர்ந்தவர் (62 வயது) ரகுவீர் சிங். இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மனைவி மாமனார் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.
இவரின் இளைய மகனான கவுரவ் சிங் பருக்காபாத் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக உள்ளார். கவுராவிற்கு பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்இ ஒரே வீட்டில் இருக்கும் இரு மருமகள்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சண்டை மாமனார் ரகுவீருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இளைய மருமகள் பிரியங்கா விதவையாக இருக்கும் தனது மூத்த மருமகளிடம் சண்டை போடுவதை ரகுவீர் தட்டி கேட்டு வந்துள்ளார். இவ்வாறு இரு மருமகள்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
சண்டையின் இடையே புகுந்த மாமனாரை இளைய மருமகள் பிரியங்கா தாக்கியதாகக் கூறப்படுகிறது. இரவு நடந்த சம்பவத்தால் அவமானம் தாங்காமல் ரகுவீர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். மறு நாள் காலை பிரியங்கா சமைத்துக் கொண்டிருந்த போது இவர் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து பிரியங்காவின் தலையில் வீசி துண்டாக்கியுள்ளார். பின்னர் அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் இரத்தக் கறையுடன் சென்று தாமாகவே சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது பிரியங்காவின் கணவர் கவுரவ் பொலிஸ் நிலையத்தில் பணியில் இருந்துள்ளார். தொடர்ந்து பிரியங்காவின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. சம்பவம் தொடர்பாக மாமனாரை சிறையில் அடைத்து விசாரித்து வரும் பொலிசார், முறைப்பாட்டில் கணவர் கவுரவ் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்த்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்