மருத்துவ உதவி கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் மருத்துவ சிகிச்சைக்காக சென்று வருவதற்கான போக்குவரத்து கொடுப்பனவு வழங்கி நேற்று புதன்கிழமை வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகம் ஊடான நிதி பங்களிப்பின் கீழ் இடம் பெற்றது.

இதில் தலா ரூபா 25,000.00 பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலருப் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்