மருதானையில் ஆர்ப்பாட்டம் : 21 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து   21 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சு நோக்கி மருத்துவ பீட மாணவர்களினால் எதிர்ப்பு பேரணி ஒன்று இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்