மரதகஹமுல அரிசி மொத்த விற்பனை நிலையத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு

கம்பஹா – மரதகஹமுல அரிசி மொத்த விற்பனை நிலையத்தில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சில வர்த்தகர்கள் அரிசியை பதுக்கி வைத்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உப்பு தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு விரைவில் நாட்டை வந்தடையும் எனத் தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.