மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

சமீபகாலமாக சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேலியகொட சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை மரக்கறிகளின் மொத்த விலை உயர்வாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சந்தைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் மரக்கறிகளின் சில்லறை விலையும் ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்படும் மரக்கறிகளின் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.