மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம் : ஒரு வாரத்திற்கு ஆதாரங்களை சமரப்பிக்குமாறு உத்தரவு

மயிலத்தமடு – மாதவனை பகுதியில் அத்துமீறி  குடியேறியுள்ள பெரும்பான்மையின மக்கள் அங்கு முன்னர்  வசித்து வந்தமைக்கான ஆதாரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட் போது ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மயிலத்தமடு – மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பு தொடர்பில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1962ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரையில் குறித்த பகுதியில் 13 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும், யுத்தம் காரணமாக அவர்கள் அங்கிருந்து பின்னர் வெளியேறியதாகவும் குறித்த குடியேற்றவாசிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்

எனினும் அவர்கள் அங்கு தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்

இந்நிலையில் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் அவர்கள் அங்கு தங்கியிருந்தமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து, குறித்த வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்