
மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில், மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ளார்.
சுன்னாகம் கிழக்கு, குமாரசுவாமி புலவர் வீதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மங்களநாயகி (வயது – 80) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் பிள்ளைகள் வேலைக்கு செல்வதனால் அவர் பெரும்பாலான நேரங்களில் தனிமையில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு அருகேயுள்ள வாழைத்தோட்டத்திற்கு சென்று, மண்ணெண்ணெயை ஊற்றி, தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்