
மன உளைச்சலுக்குள்ளாகும் பல்கலை மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்
மன உளைச்சலுக்குள்ளாகும் பல்கலை மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்
பல்கலைக்கழகங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை மீட்பதற்காக சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் உளவியல் நிபுணர்களை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகள் மற்றும் பிற பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.